2019 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதியன்று இந்திய அரசு நல் ஆளுகைக் குறியீட்டை அறிமுகப் படுத்தியுள்ளது.
மொத்தமுள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களானவை பெரிய குழுக்கள், வடகிழக்கு & மலைப் பிரதேச மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் என 3 குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
“பெரிய மாநிலங்கள்” பிரிவின் நல் ஆளுகைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
நல் ஆளுகைக் குறியீட்டில் ஜார்க்கண்ட் மாநிலமானது கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய தரவரிசையில், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் டாமன் & டையூ ஆகியவை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களாக உள்ளன.