May 22 , 2022
1113 days
500
- மேற்கு மத்திய இரயில்வே நிர்வாகமானது நவ்தூத் என்ற பெயரில் மின்கலம் மூலம் இயக்கப்படும் இரட்டைப் பயன்முறை இன்ஜினை (இயந்திரத்தினை) உருவாக்கி உள்ளது.
- இந்த இயந்திரம் மின்கலம் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு முறைகளிலும் இயங்குகிறது.
- தற்போது, இது ஜபல்பூர், முத்வாரா மற்றும் பிற நிலையங்களில் இரயில்களை இணைக்கும் பணியில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த இரட்டைப் பயன்முறை இரயில் இயந்திரமானது ரயில்வே வாரியத்தின் சிறந்தப் புத்தாக்க விருதையும் பெற்றுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில், பசுமை எனப்படும் இதே வகையான இரட்டைப் பயன்முறை இயந்திரத்தினை தெற்கு இரயில்வேயின் சென்னை ரயில்வே பிரிவினால் உருவாக்கப் பட்டது.
Post Views:
500