மத்திய உள்துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று நாகாலாந்தை 1958 ஆம் ஆண்டு ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ், மேலும் ஆறு மாதங்களுக்கு 'அமைதி குலைந்த பகுதி' என்று அறிவித்துள்ளது.
நாகாலாந்து கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் உள்ளது.
ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமானது 1958 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் நடைமுறையில் உள்ளது.
உள்துறை அமைச்சகமானது முன்னதாக ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மேகாலயா மாநிலம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில இடங்கள் ஆகிய இடங்களில் இருந்து முழுமையாக திரும்பப் பெற்றது.
தற்போது, நாகாலாந்து, மணிப்பூர் (இம்பால் மாநகராட்சி தவிர), அசாம், அருணாச்சலப் பிரதேசத்தின் சில மாவட்டங்கள் ஆகிய இடங்களில் மட்டுமே ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமானது நடைமுறையில் உள்ளது.
மாநில ஆளுநரோ அல்லது மத்திய அரசோ ஒரு மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசம் முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியை மட்டும் ஒரு அமைதி குலைந்த பகுதியாக அறிவிக்க முடியும்.