நாசாவின் தலைமையில் தாழ் வெப்ப மண்டலம் குறித்த ஆய்வு
September 23 , 2020 2102 days 1067 0
ஒரு அறிக்கையின்படி, பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் வெளியிடப் படுவது தொடர்ந்தால், கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவின் பனித்தட்டுகள் 2100 ஆம் ஆண்டில் உலகளாவிய கடல் மட்ட உயர்வான 38 செ.மீ. என்ற அளவினை விட அதிகமாக அடைந்திட இந்த இரண்டும் பங்களிக்கும்.
குறைந்த உமிழ்வுகள் நிலையில், பனித் தட்டின் இழப்பானது உலக கடல் மட்ட உயர்வை 1.3 அங்குலம் அதிகரிக்கச் செய்யவிருக்கின்றது (3 செ.மீ).
இந்தக் கண்டுபிடிப்புகள் கடல்கள் மற்றும் தாழ்வெப்ப மண்டலம் குறித்த காலநிலை மாற்றம் மீதான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் 2019 ஆம் ஆண்டு சிறப்பு அறிக்கையுடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் உள்ளது. இந்த சிறப்பு அறிக்கை புவியின் மேற்பரப்புப் பகுதியில் உள்ள நீர் திட நிலையில் உள்ளதாகக் கூறுகின்றது.