நாட்டின் முதல் தானிய ஏடிஎம்
July 18 , 2021
1415 days
665
- நாட்டின் முதல் தானிய ஏடிஎம் ஆனது ஹரியானாவின் குருகிராமில் ஒரு முதன்மைத் திட்டமாக நிறுவப்பட்டுள்ளது.
- இது ஒரு வங்கி ஏடிஎம் இயந்திரம் போன்றதே ஆகும்.
- இந்த இயந்திரமானது ஐக்கிய நாடுகள் அவையின் ‘உலக உணவுத் திட்டத்தின்’ கீழ் நிறுவப் பட்டுள்ளது.
- இது “தானியங்கு, பல்பொருள், தானிய வழங்கீட்டு இயந்திரம்” என அழைக்கப் படுகிறது.
- கோதுமை, அரிசி மற்றும் சிறுதானியங்கள் ஆகியவை இந்த இயந்திரத்தின் மூலம் வழங்கப் படும்.
- தற்போது ஃபருக் நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘தானிய ஏடிஎம்” இயந்திரத்தின் மூலம் கோதுமை விநியோகம் தொடங்கப் பட்டுள்ளது.

Post Views:
665