குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 08-ம் தேதியன்று சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டின் நாரிசக்தி விருதுகளை வழங்கினார்.
இந்தியாவில் பெண்களுக்கான அதிகபட்ச குடிமையியல் விருது நாரிசக்தி விருதுகள் ஆகும்.
2018 ஆம் ஆண்டிற்கான 44 நாரி சக்தி விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதாளர்களில் விஞ்ஞானிகள், தொழில்முனைவோர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், கட்டிட வேலையாளர்கள், நீர்மூழ்கி இயக்குநர், கமாண்டோ பயிற்றுநர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் ஆகியோர் அடங்குவர்.
பேடி பச்சாவோ பேடி பதாவோ திட்டத்தின் கீழ் குழந்தை பிறப்பு சமயத்தில் குழந்தைப் பாலின விகிதத்தை அதிகரிப்பதில் மேன்மையான வளர்ச்சியை அடைந்ததற்காக தமிழ்நாடு சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை விருது பெற்றது.
நாரிசக்தி விருதுகள்
முன்னதாக ஸ்திரி சக்தி விருதுகள் என்று அறியப்பட்ட நாரி சக்தி விருதுகள் 1991 ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்டன.
பெண்களின் முன்னேற்றத்திற்காக விதிவிலக்கான சேவைகளை வழங்கும் புகழ்பெற்ற பெண்கள் மற்றும் நிறுவனங்கள் நாரி சக்தி விருதுகள் வழங்கப் பெறுகின்றன.
இந்த விருது பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றது.
விருது பெறுபவர்களில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகிய இருவரும் அடங்குவர்.