தொலைத்தொடர்புத் துறையானது 'நிதி மோசடி ஆபத்து என்ற குறிகாட்டியினை (FRI)' அறிமுகப் படுத்தியுள்ளது.
இது இணையவெளிக் குற்ற மோசடி மற்றும் நிதி குற்றங்களைச் சமாளிப்பதற்காக வங்கிகள், UPI சேவை வழங்குநர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் நன்கு மேம்பட்ட புலனாய்வுப் பகிர்வை செயல்படுத்துகிறது.
இது ஒரு கைபேசி எண்ணை 'நடுத்தர', 'உயர்' அல்லது 'மிகவும் அதிக' நிதி மோசடி அபாயத்துடன் தொடர்புடையதாக வகைப்படுத்துகின்ற ஓர் இடர் அடிப்படையிலான அளவீடு ஆகும்.
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகமானது (UPI) மிகவும் அதிக FRI கொண்ட கைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனைகளை நிராகரித்து, திரையில் எச்சரிக்கையை வழங்கும்.