நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் 'சாம்பல் நிறப் பட்டியல்'
June 22 , 2022 1160 days 497 0
நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) அதிகபட்சக் கண்காணிப்பில் உள்ள நாடுகளின் "சாம்பல் நிறப் பட்டியலில்" பாகிஸ்தான் தொடர்ந்து இடம் பெற்றிருக்கும்.
பாரீஸ் நகரில் அமைந்துள்ள நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் நிறப் பட்டியலில் பாகிஸ்தான் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இடம் பெற்றுள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ய வழிவகுத்த பணமோசடியைத் தடுக்கத் தவறியதாலும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான செயற்திட்டத்தை நிறைவேற்றாததாலும் இது தொடர்கிறது.