மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் ஒருங்கிணைந்த ‘தடையின்மைச் சான்றிதழுக்கான நிகழ்நேர விண்ணப்பச் செயலாக்க அமைப்பை (No Objection Certificate Online Application Processing System - NOAPS)’ மீண்டும் தொடங்கி, அதனை விரிவுபடுத்தியுள்ளது.
இது மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை உள்ளடக்கும்.
பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களைச் சுற்றியுள்ள எந்தவொரு கட்டுமான நடவடிக்கைகளுக்கான அனுமதி மற்றும் தடையின்மைச் சான்றிதழானது NOAPS மூலம் செயல்படுத்த முடியும்.
இந்தத் தளமானது இஸ்ரோவின் “ஸ்மாரக்” கைபேசிச் செயலியினால் ஆதரவளிக்கப் படுகின்றது.