அரசியலமைப்பின் சரத்து 21 இன் கீழ் பாதுகாப்பான இரத்த மாற்றத்தை உறுதி செய்வதற்காக அனைத்து இரத்த வங்கிகளிலும் நியூக்ளிக் அமில சோதனை (NAT) கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது.
NAT என்பது தானம் செய்யப்பட்ட இரத்தத்தில் உள்ள வைரஸ்களின் மரபணுப் பொருளை (DNA அல்லது RNA) கண்டறியும் ஒரு மூலக்கூறு சோதனையாகும்.
இதன் மூலம் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV), ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் C போன்ற தொற்றுகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண முடியும்.
இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நொதி சார்ந்த நோய் எதிர்ப்பு உறிஞ்சு சோதனை (ELISA) போன்ற சோதனைகளுடன் ஒப்பிடும்போது NAT "காத்திருப்புக் காலத்தை" குறைக்கிறது.
பாதுகாப்பான இரத்தமாற்றம் இந்திய அரசியலமைப்பின் சரத்து 21 இன் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும் என்று மனு வாதிடுகிறது.
இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக, செலவு, மாநில அளவிலான செயல்படுத்தல் மற்றும் சாத்தியக் கூறு குறித்த தரவுகளை நீதிமன்றம் கேட்டுள்ளது.