இந்தியாவின் லோக்பால் ஆனது, தெற்கு டெல்லியின் நௌரோஜி நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் உள்ள ஒரு புதிய நிரந்தர அலுவலகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
2013 ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டமானது, மத்திய நிலையில் லோக்பால் மற்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தா ஆகியவற்றை நிறுவுவதற்கு வழி வகை செய்தது.
அவை ஒரு "ஒம்புட்ஸ்மேன் (குறைகேட்பு)" அதிகாரியின் செயல்பாட்டை மேற் கொள்கின்றன.
மேலும், சில பொதுப் பணியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அது தொடர்புடைய விடயங்களையும் அவை விசாரிக்கின்றன.
லோக்பால் அமைப்பு ஒரு தலைவர் மற்றும் அதிகபட்சமாக 8 உறுப்பினர்கள் என்று பல உறுப்பினர்கள் கொண்ட ஒரு அமைப்பாகும்.