TNPSC Thervupettagam
April 17 , 2019 2260 days 714 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research and Development Organisation) குறைஒலி வேகம் கொண்ட “நிர்பய்” என்ற ஏவுகணையை ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • பல்வேறு தளங்களிலிருந்து ஏவப்படக் கூடிய திறன் கொண்ட இது நீண்ட தொலைவு சென்று தாக்கி அழிக்கும் குறைஒலி வேகம் கொண்ட ஏவுகணையாகும்.
  • நிர்பய் ஏவுகணையானது ஒரு கலப்பு ஏவுகணையாகும். வானூர்தித் தொழில்நுட்பமானது ஏவுகணை போன்று இது செங்குத்தாக மேலெழும்புவதற்கும் விமானம் போன்று கிடைமட்டமாக பறப்பதற்கும் அனுமதிக்கின்றது.
  • இது வான் பகுதியில் 100 மீட்டருக்கும் கீழான உயரத்தில் மாக் 0.7 என்ற வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
  • இந்த ஏவுகணையானது சிறிது நேரம் இலக்கை நோக்கி சுற்றித் திரிந்து, இலக்கைத் தேடி அதன் பின் இலக்கானது தென்பட்டவுடன் அதைத் தாக்கி அழிக்கும்.
  • இந்த ஏவுகணையில் வழிகாட்டு, கட்டுப்பாட்டு மற்றும் ஊடுருவல் அமைப்பானது புவியிடங் காட்டியுடன் கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வளைய லேசர் கிரையோஸ்கோப் மற்றும் எம்இஎம்எஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட அசைவற்ற ஊடுருவல் அமைப்பு ஆகியவற்றைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்