பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research and Development Organisation) குறைஒலி வேகம் கொண்ட “நிர்பய்” என்ற ஏவுகணையை ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பல்வேறு தளங்களிலிருந்து ஏவப்படக் கூடிய திறன் கொண்ட இது நீண்ட தொலைவு சென்று தாக்கி அழிக்கும் குறைஒலி வேகம் கொண்ட ஏவுகணையாகும்.
நிர்பய் ஏவுகணையானது ஒரு கலப்பு ஏவுகணையாகும். வானூர்தித் தொழில்நுட்பமானது ஏவுகணை போன்று இது செங்குத்தாக மேலெழும்புவதற்கும் விமானம் போன்று கிடைமட்டமாக பறப்பதற்கும் அனுமதிக்கின்றது.
இது வான் பகுதியில் 100 மீட்டருக்கும் கீழான உயரத்தில் மாக் 0.7 என்ற வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணையானது சிறிது நேரம் இலக்கை நோக்கி சுற்றித் திரிந்து, இலக்கைத் தேடி அதன் பின் இலக்கானது தென்பட்டவுடன் அதைத் தாக்கி அழிக்கும்.
இந்த ஏவுகணையில் வழிகாட்டு, கட்டுப்பாட்டு மற்றும் ஊடுருவல் அமைப்பானது புவியிடங் காட்டியுடன் கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வளைய லேசர் கிரையோஸ்கோப் மற்றும் எம்இஎம்எஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட அசைவற்ற ஊடுருவல் அமைப்பு ஆகியவற்றைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.