TNPSC Thervupettagam

நிலத்தினால் சூழப்பட்ட நாடுகள் குறித்த ஐ.நா. மாநாடு

August 13 , 2025 15 hrs 0 min 36 0
  • நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் குறித்த மூன்றாவது ஐக்கிய நாடுகளின் மாநாடு துர்க்மெனிஸ்தானின் அவாசா எனுமிடத்தில் நடைபெற்றது.
  • இந்த மாநாடு ஆனது அவாசா அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு நிறைவடைந்தது.
  • இந்த மாநாட்டில் 2024 ஆம் ஆண்டு முதல் 2034 ஆம் ஆண்டு வரையிலான அவாசா செயல் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Driving Progress Through Partnerships" என்பதாகும்.
  • வர்த்தகம் மற்றும் போக்குவரத்து சார்ந்த சவால்களை எதிர்கொள்ளும் 32 நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும்.
  • துர்க்மெனிஸ்தான் ஆனது, எதிர்காலத்திற்கான உலகளாவிய மருத்துவம் என்ற சுகாதாரத் திட்டத்தினை முன் வைத்தது.
  • இது துபாயில் நடைபெற்ற 28வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP28) முதன் முதலில் முன் வைக்கப்பட்ட நிலையான போக்குவரத்து இணைப்பின் உலகளாவிய தகவல் அறிக்கையினை முன்மொழிந்தது.
  • இது 2030 ஆம் ஆண்டு முதல் 2040 ஆம் ஆண்டு வரையிலான ஹைட்ரஜன் ஆற்றல் உற்பத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • கழிவுகளைக் குறைப்பதற்காக மறுபயன்பாட்டினை சுழற்சி முறை பொருளாதாரத்திற்கான உலகளாவிய கட்டமைப்பையும் இது முன்மொழிந்தது.
  • கடல் பகுதியைப் பாதுகாப்பதற்கான காஸ்பியன் சுற்றுச்சூழல் முன்னெடுப்பு குறித்தும் துர்க்மெனிஸ்தான் எடுத்துரைத்தது.
  • உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் நெருக்கடிகளில் ஒன்றைத் தீர்ப்பதற்காக ஐ.நா.வின் ஆரல் கடல் படுகைத் திட்டத்தினை இது ஆதரித்தது.
  • இது 2025 ஆம் ஆண்டினை சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டாகவும் முன் மொழிந்தது.
  • இது துர்க்மெனிஸ்தானின் நடுநிலையின் 30 ஆம் ஆண்டு நிறைவையும், ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆம் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்