நிலைப்படுத்தப்பட்ட தொலைக் கட்டுப்பாட்டுத் துப்பாக்கி
July 24 , 2021 1483 days 614 0
திருச்சிராப்பள்ளியின் ஆயுதத் தொழிற்சாலையானது இந்தியக் கடற்படையிடம் 12.7 மி.மீ. M2 NATO என்ற வகையிலான நிலைப்படுத்தப்பட்ட 15 தொலைக்கட்டுப்பாட்டுத் துப்பாக்கிகளையும் இந்தியக் கடலோர காவற்படையிடம் அது போன்ற 10 துப்பாக்கிகளையும் வழங்கியுள்ளது.
இவை இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் எனும் ஒரு நிறுவனத்துடனான தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் தயாரிக்கப் பட்டவையாகும்.