TNPSC Thervupettagam

நிலையான எரிபொருள் குறித்த IEA அறிக்கை 2025

October 25 , 2025 11 days 71 0
  • "Towards Common Criteria for Sustainable Fuels" என்ற தலைப்பிலான இந்த அறிக்கை சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) வெளியிடப்பட்டது.
  • நிலையான எரிபொருள் பயன்பாடு ஆனது 2035 ஆம் ஆண்டிற்குள் நான்கு மடங்காக அதிகரிக்கும் என்று IEA கூறுகிறது.
  • போக்குவரத்து மற்றும் தொழில்துறையில் புதைபடிவ எரிபொருள்களை சார்ந்து இருக்கும் நிலையைக் குறைக்க உயிரி எரிபொருள்கள், உயிரி வாயுக்கள் மற்றும் குறைந்த உமிழ்வு கொண்ட ஹைட்ரஜன் அவசியமாகும்.
  • 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி நிலையான எரிபொருள்கள் ஏற்கனவே உலகளாவிய எண்ணெய்த் தேவையை ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் குறைக்கின்றன.
  • உயிரி வாயுக்கள் மற்றும் ஹைட்ரஜன் பயன்பாடு அதிகரித்து வருவதுடன் திரவ உயிரி எரிபொருள்கள் ஆனது தற்போது உலகளாவிய போக்குவரத்து எரிசக்தி தேவையில் 4% பங்கினைக் கொண்டுள்ளன.
  • பிரேசில் போன்ற நாடுகள் மொத்த எரிசக்தி நுகர்வில் சுமார் 10% என்ற அளவில் புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன.
  • 2035 ஆம் ஆண்டிற்குள், நிலையான எரிபொருட்கள் ஆனது உலகளவில் சாலைப் போக்குவரத்தில் 10%, விமானப் போக்குவரத்தில் 15% மற்றும் கப்பல் எரிபொருள் தேவையில் 35% ஆகியவற்றை வழங்க முடியும்.
  • நிலையான எரிபொருட்களில் ஒட்டு மொத்த முதலீடுகள் ஆனது 2035 ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டக்கூடும் என்ற நிலையில் இது சுமார் 2 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்