12வது நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாடு ஆனது உத்தரகாண்டின் டேராடூனில் நடைபெற்றது.
இந்த உச்சி மாநாடு ஆனது ஒருங்கிணைந்த மலை முன்னெடுப்பினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
இது பருவநிலை மாற்றம், பேரிடர் அபாயங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
தேசிய அளவிலான மலைக் கொள்கை அமைப்புகளை உருவாக்குதல், இடர்களுக்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கான திட்டமிடல் மற்றும் பங்கேற்பு சார்ந்த நிர்வாக மாதிரிகள் ஆகியவை முக்கியப் பரிந்துரைகளில் அடங்கும்.
உள்ளடக்கிய மற்றும் நிலையான மலை மேம்பாட்டுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் "டேராடூன் பிரகடனம்" ஏற்றுக் கொள்ளப் பட்டதுடன் இந்த உச்சி மாநாடு நிறைவடைந்தது.