முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPFA) ஆனது கிராமப்புறப் பெண்களிடையே நிதி சார் கல்வியறிவை ஊக்குவிப்பதற்காக நிவேஷக் தீதியின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியது.
நிதி ரீதியாக தகவல் பெற்ற மற்றும் தகவமைப்பு கொண்ட கிராமப்புற சமூகத்தினை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
IEPFA, பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் (MCA) கீழ் செயல்படுகிறது.
இந்தத் திட்டமானது, மக்களிடம் விழிப்புணர்வினை விரிவுபடுத்தியது, ஊடாடும் பயிற்சித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது மற்றும் அடிமட்ட அமைப்புகளுடன் கூட்டுறவினை மேற்கொண்டது.
இது பெண்கள் தலைமையிலான நிதி அதிகாரமளித்தல், சேமிப்பு, முதலீட்டுப் பாதுகாப்பு, மோசடித் தடுப்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தியது.
கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நிதிக் கல்வியை கடைநிலை வரை வழங்குவதை இந்திய அஞ்சல் பண வழங்கீட்டு வங்கி (IPPB) ஆதரித்தது.