TNPSC Thervupettagam

"நிவேஷக் ஷிவிர்" முன்னெடுப்பு

June 2 , 2025 7 days 48 0
  • முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPFA) ஆனது, SEBI உடன் இணைந்து, "நிவேஷக் ஷிவிர்" என்ற அதன் மிக முதன்மையான முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • உரிமை கோரப்படாத ஈவுத் தொகை மற்றும் பங்குகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் வகையில் இந்த முன்னெடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது முதலீட்டாளர் சேவைகளுக்கான நேரடி அணுகலையும் வழங்குகிறது.
  • IEPFA உடன் உள்ள உரிமை கோரப்படாத பங்குகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.1 பில்லியனுக்கும் அதிகமாகும் என்பதோடு இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய ஆகும்.
  • உரிமை கோரப் படாதப் பங்குத் தொகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,000 கோடி ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்