TNPSC Thervupettagam

நீட் (NEAT) திட்டம் 2019 - உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு

September 21 , 2019 2063 days 780 0
  • உயர் கல்வியில் சிறந்த கற்றல் விளைவுகளைப் பெற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக “நீட்” (NEAT) என்ற ஒரு புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • கற்பவரின் தேவைகளுக்கு ஏற்ப கற்றலை மேலும் தனிப்பயனாக்கவும் திருத்தியமைக்கவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி கூட்டிணைவானது (National Educational Alliance for Technology - NEAT) நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நீட் திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக AICTE விளங்கும்.
  • இந்தத் திட்டம் பொது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்காளர்களாக இணைக்கப்படும்.
  • இவை NEAT தளத்தின் மூலம் கற்பவர்களின் பதிவுகளை நிர்வகிப்பதற்கும் தீர்வுகளை வளர்ப்பதற்கும் பொறுப்பாளர்களாக விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்