TNPSC Thervupettagam

நீதித்துறைப் பணியாளர்களுக்கான தகுதி

May 28 , 2025 2 days 49 0
  • உச்ச நீதிமன்றமானது நுழைவு நிலை நீதிபதி பணிக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் சட்டப் பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு கட்டாய நிபந்தனையினை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பணிக்குச் சேர முயற்சிக்கும் ஆர்வலர்கள், அவர்கள் பயிற்சி பெறும் நீதிமன்றத்தின் முதன்மை நீதித்துறை அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட, ஒரு வழக்கறிஞராக தங்கள் தொழில்முறை அனுபவத்தைக் காட்டும் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்தச் சான்றிதழை, முதன்மை நீதித்துறை அதிகாரியால் மிகவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட 10 ஆண்டு கால அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞரும் வழங்கலாம்.
  • எந்தவொரு நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரியிடமும் சட்ட எழுத்தராகப் பயிற்சி பெற்ற அனுபவமும், அவர்களின் மொத்தப் பயிற்சி ஆண்டுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது கருத்தில் கொள்ளப்படும்.
  • 2002 ஆம் ஆண்டு ஷெட்டி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் இந்த மூன்று ஆண்டு விதி ரத்து செய்யப்பட்டது.
  • அரசியலமைப்பின் 234வது சரத்தின் படி, ஒரு மாநிலத்தின் நீதித்துறைப் பணிக்கு மாவட்ட நீதிபதிகள் அல்லாத நபர்களை நியமிப்பது மாநில ஆளுநரால் மேற்கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்