மத்திய அரசானது, வரவிருக்கும் கூட்டத் தொடரின் போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவிற்கு எதிராக பதவி நீக்கம் குறித்த ஒரு தீர்மானத்தை முன் வைக்க உள்ளது.
அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து இந்தப் பதவி நீக்க தீர்மானம் முன் வைக்கப்பட உள்ளது.
இந்த சர்ச்சையின் போது அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
நீதிபதி வர்மாவின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட நிகழ்வில் தான் குற்றமற்றவர் என்று கூறிய போதிலும், அக்குழு அவர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
நீதிபதி வர்மா, பதவி விலக கோரப் பட்ட போதிலும் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
இது தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அவர் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதத் தூண்டியது.
விசாரணைக் குழுவின் அறிக்கை, நீதிபதி வர்மாவைப் பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்திருந்தது என்பதோடு மத்திய சட்டத் துறை அமைச்சர் இந்த அறிக்கையின் அடிப்படையில் பதவி நீக்கத் தீர்மானத்தை முன்வைப்பார்.
1968 ஆம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்படி, ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் எந்த அவையிலும் ஏற்றுக் கொள்ளப்படும்.
பின்னர் சபாநாயகர் அல்லது தலைவர் பதவி நீக்கம் (Impeachment) கோரப்பட்டதற்கான காரணங்களை ஆராய மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பார்.
ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தினை முன் வைக்க, அந்தத் தீர்மானம் ஆனது மாநிலங்கள் அவையில் முன் வைக்கப்பட்டால் அதற்கு வேண்டி 50 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும், மக்களவையில் முன் வைக்கப்பட்டால் 100 உறுப்பினர்களின் ஆதரவும் அவசியம் ஆகும்.
பதவி நீக்கத் தீர்மானத்தை இரு அவைகளிலும் முன் வைக்கலாம்.
இரு அவைகளிலும் ஒரு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படும் போது, நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான அரசியலமைப்பு ரீதியாக வகுக்கப்பட்ட ஒரு நடைமுறைக்குப் பொதுவாக மூன்று பேர் கொண்ட குழு நிர்ணயிக்கப்படுகிறது.
தலைமை நீதிபதி கன்னாவால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவானது ஏற்கனவே ஆதாரங்களை ஆராய்ந்துள்ளதால் நீதிபதி வர்மாவின் பதவி நீக்கத் தீர்மானத்திற்கு அதற்கான அவசியமிருக்காது.