புனேவிலுள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்திற்கு வருகை புரிந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த நிறுவனத்தின் மைதானத்திற்கு “நீரஜ் சோப்ரா மைதானம்” எனப் பெயரிட்டார்.
11 விளையாட்டுத் துறைகளின் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இந்திய இராணுவத்தின் (விளையாட்டுத் துறையில்) முழு கவனமாகும்.
இந்திய இராணுவத்தின் “மிஷன் ஒலிம்பிக்ஸ்” என்ற திட்டம் ஆனது 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது ஒலிம்பிக் மற்றும் இதர பிற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வகையிலான பயிற்சியினை வழங்கும் நோக்கோடு தொடங்கப்பட்டது.
குறிப்பு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு கௌரவமளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று ஈட்டி எறிதல் தினமாக அனுசரிக்கப் படும் என இந்திய தடகளக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.