உலக சுகாதார அமைப்பானது தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கத்திய பசிபிக் பகுதிகளில் நீரில் மூழ்குதலைத் தடுத்தல் குறித்த தனது முதலாவது பிராந்திய நிலை அறிக்கையை உலக சுகாதார அமைப்பானது வெளியிட்டுள்ளது.
உலகின் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகளானது ஆசிய பசிபிக் பகுதியில் கடலில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் என இந்த அறிக்கை கூறுகிறது.
உலகளவில் தற்செயலாக ஏற்படும் காயம் மற்றும் இறப்பு ஆகியவற்றிற்கு மூழ்குதல் மூன்றாவது முன்னணி காரணமாக உள்ளது.
அனைத்து விதமான காயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 7 சதவீதமானது மூழ்குதலால் நிகழ்ந்தவையாகும்.
சராசரியாக பெண்களை விட ஆண்களே அதிகமாக கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.