மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் மின் கட்டமைப்பின் நம்பகத் தன்மையை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு நீர்மின் திட்டங்களை மேம்படுத்தியும் மின்கலச் சேமிப்பை விரிவுபடுத்தியும் வருகிறது.
2026-27 ஆம் ஆண்டிற்கு, தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) 4,776 மில்லியன் யூனிட்டுகள் (MU) நீர்மின் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் 107 இயந்திரங்களுடன் 47 நீர்மின் நிலையங்களை இயக்கி வருகிறது, இதன் மொத்த நிறுவப்பட்ட திறன் 2,325.90 மெகாவாட் (MW) ஆகும்.
மாயாறு மற்றும் கோதையாறு உள்ளிட்ட பழைய மின் நிலையங்களில் புனரமைப்பு, நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்படுத்துதல் (RMU) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஆறு துணை மின் நிலையங்களில் 1,000 மெகாவாட்-மணி (MWh) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) அமைக்கும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் 11 துணை மின் நிலையங்களில் 1,500 மெகாவாட்-மணி (MWh) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, இது 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.