நீர்மூழ்கிக் கப்பலிலிருந்துச் செலுத்தப்படும் ஏவுகணை JL-3
June 29 , 2019 2195 days 780 0
நீர்மூழ்கிக் கப்பலிலிருந்துச் செலுத்தப்படும் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பரிசோதனை செய்துள்ளதை சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இது போகாய் கடலிலிருந்துச் செலுத்தப்பட்டது. இது மேற்கு சீனாவில் பல ஆயிரம் மைல்கள் பறந்து அதன் இலக்கை அடைந்தது.
இது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து செலுத்தப்பட்டு அமெரிக்காவில் உள்ள எந்தவொரு பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு யுத்திசார் ஏவுகணை என்று அமெரிக்காவினால் இது கருதப்படுகின்றது.
JL-3 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இது சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மிகவும் இரகசியமான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகும்.