TNPSC Thervupettagam

நீர்வள நிதிகள் பயன்பாடு 2025

May 4 , 2025 42 days 88 0
  • கடந்த நிதியாண்டில், மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 98.39 சதவீத நிதி செலவிடப் பட்டு உள்ளதுடன் நீர் வளத் திட்டங்களுக்காக மத்திய அரசினால் வழங்கப்பட்ட முழு நிதி ஒதுக்கீட்டையும் ஜல் சக்தி அமைச்சகம் பயன்படுத்தியுள்ளது.
  • மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள் (CSS) முதன்மையாக மத்திய அரசால் நிதியளிக்கப் பட்டாலும், இவை பெரும்பாலும் மாநில அரசுகளின் ஒரு பங்களிப்புடன் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன.
  • மத்திய அரசின் திட்டங்கள்  (Central Sector schemes) என்பவை, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்பு எதுவும் இல்லாமல் மத்திய அரசினால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன.
  • 13,431.48 கோடி ரூபாய்கள் என்ற மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீட்டு மதிப்பீட்டினை விட உண்மையான செலவினம் 13,216.34 கோடி ரூபாயாக இருந்தது.
  • இதனை ஒப்பிடுகையில், ஒதுக்கப்பட்ட 6,573.73 கோடி ரூபாயில் 5,376.73 கோடி ரூபாய் செலவிடப்பட்டதுடன் மத்திய அரசின் திட்டங்கள் சுமார் 81.79 சதவீதம் என்ற சற்று குறைவான பயன்பாட்டு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
  • 2023-24 ஆம்  நிதியாண்டில், மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்கான ஒரு ஒதுக்கீட்டில் 49.45 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்