கடந்த நிதியாண்டில், மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 98.39 சதவீத நிதி செலவிடப் பட்டு உள்ளதுடன் நீர் வளத் திட்டங்களுக்காக மத்திய அரசினால் வழங்கப்பட்ட முழு நிதி ஒதுக்கீட்டையும் ஜல் சக்தி அமைச்சகம் பயன்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள் (CSS) முதன்மையாக மத்திய அரசால் நிதியளிக்கப் பட்டாலும், இவை பெரும்பாலும் மாநில அரசுகளின் ஒரு பங்களிப்புடன் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசின் திட்டங்கள் (Central Sector schemes) என்பவை, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்பு எதுவும் இல்லாமல் மத்திய அரசினால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன.
13,431.48 கோடி ரூபாய்கள் என்ற மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீட்டு மதிப்பீட்டினை விட உண்மையான செலவினம் 13,216.34 கோடி ரூபாயாக இருந்தது.
இதனை ஒப்பிடுகையில், ஒதுக்கப்பட்ட 6,573.73 கோடி ரூபாயில் 5,376.73 கோடி ரூபாய் செலவிடப்பட்டதுடன் மத்திய அரசின் திட்டங்கள் சுமார் 81.79 சதவீதம் என்ற சற்று குறைவான பயன்பாட்டு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
2023-24 ஆம் நிதியாண்டில், மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்கான ஒரு ஒதுக்கீட்டில் 49.45 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.