TNPSC Thervupettagam

நீலகிரியில் அறுகாலிகள்

June 12 , 2025 2 days 28 0
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நீலகிரியில் முதலில் மிக நன்கு விவரிக்கப்பட்ட அறுகாலி (ஹெக்ஸாபாட்) இனம் ஆனது சமீபத்தில் "மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது".
  • பிரான்சு நாட்டினைச் சேர்ந்த அறிவியலாளரான J.R. டென்னிஸ் என்பவர், 1933 ஆம் ஆண்டில் நீலகிரியில் உள்ள கூடலூருக்கு அருகிலுள்ள தேவர்சோலையிலிருந்து ஓர் அரிய வகை ஸ்பிரிங் டெயில் (கொல்லெம்பொல்லா) பூச்சியை அடையாளம் கண்டார்.
  • அவர் அதற்கு பாலிஸ்டுரா ஃபிட்சி என்று பெயரிட்டு, பின்னர் 1944 ஆம் ஆண்டில் அதன் பெயரை பாலிஸ்டுரா ஃபிட்சோயிட்ஸ் என்று மாற்றினார்.
  • உலகம் முழுவதும் சுமார் 21 இனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த இனத்தின் மரபணு தரவு கிடைக்கவில்லை.
  • இதுவரை இந்தியாவில் இரண்டு வகையான பாலிஸ்டுரா மட்டுமே பதிவாகியுள்ளது.
  • இரண்டாவது வகையானது வங்காளத்தில் பதிவானது என்ற நிலையில் இது யோசி என்பவரால் 1966 ஆம் ஆண்டில் பாலிஸ்டுரா பெங்கால் எனப் பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்