ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நீலகிரியில் முதலில் மிக நன்கு விவரிக்கப்பட்ட அறுகாலி (ஹெக்ஸாபாட்) இனம் ஆனது சமீபத்தில் "மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது".
பிரான்சு நாட்டினைச் சேர்ந்த அறிவியலாளரான J.R. டென்னிஸ் என்பவர், 1933 ஆம் ஆண்டில் நீலகிரியில் உள்ள கூடலூருக்கு அருகிலுள்ள தேவர்சோலையிலிருந்து ஓர் அரிய வகை ஸ்பிரிங் டெயில் (கொல்லெம்பொல்லா) பூச்சியை அடையாளம் கண்டார்.
அவர் அதற்கு பாலிஸ்டுரா ஃபிட்சி என்று பெயரிட்டு, பின்னர் 1944 ஆம் ஆண்டில் அதன் பெயரை பாலிஸ்டுரா ஃபிட்சோயிட்ஸ் என்று மாற்றினார்.
உலகம் முழுவதும் சுமார் 21 இனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த இனத்தின் மரபணு தரவு கிடைக்கவில்லை.
இதுவரை இந்தியாவில் இரண்டு வகையான பாலிஸ்டுரா மட்டுமே பதிவாகியுள்ளது.
இரண்டாவது வகையானது வங்காளத்தில் பதிவானது என்ற நிலையில் இது யோசி என்பவரால் 1966 ஆம் ஆண்டில் பாலிஸ்டுரா பெங்கால் எனப் பெயரிடப்பட்டது.