நீலகிரியில் ஒவ்வோர் ஆண்டும் கோடை விழாவின் ஒரு பகுதியாக மலர் கண்காட்சி, காய்கறிக் கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சி ஆகிய மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
வருடாந்திரப் பழக் கண்காட்சியானது இந்த ஆண்டு அதன் 65ஆம் ஆண்டினை நிறைவு செய்துள்ளது.
முதல் மலர்க் கண்காட்சியானது 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நடைபெற்றது.
முதல் "அதிகாரப்பூர்வ" மலர்க் கண்காட்சி ஆனது 1896 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
அதன் பின்னர், மலர்க் கண்காட்சியானது 127 முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் தோட்டப் பயிர்க் கண்காட்சியானது மே 30 முதல் ஜூன் 01 ஆம் தேதி வரை நடைபெற்றது.