நெல் மற்றும் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்வு
August 14 , 2026 5 days 77 0
நெல் மற்றும் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகையில் 'வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வை' தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
செப்டம்பர் மாதத்தில் நெல் கொள்முதல் தொடங்கப்படும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (MSP) கூடுதலாக, மெல்லிய ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ₹289 சிறப்பு ஊக்கத்தொகையை அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு ₹159 ஆக இருக்கும்.
இந்த ஊக்கத் தொகையையும் சேர்த்து, மெல்லிய ரக நெல்லின் மொத்த விலை குவிண்டால் ஒன்றுக்கு ₹2,750 ஆகவும், சாதாரண ரக நெல்லின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ₹2,600 ஆகவும் இருக்கும்.
வரலாற்றிலேயே முதல் முறையாக, மாநில அரசு ஓராண்டில் ஊக்கத்தொகையை ₹156 உயர்த்தியுள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்காகச் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள டன்னுக்கு ₹3,290.50 விலையுடன் கூடுதலாக, டன்னுக்கு ₹709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கான மொத்த விலை டன்னுக்கு ₹4,000 ஆக உயரும், கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகை ₹134-க்கும் அதிகமாக உயர்த்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
சட்டமன்ற விதி எண் 110-இன் கீழ் முதலமைச்சர் இந்தத் தனி அறிக்கையை வெளியிட்டார்.
விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிக்கையின் மீது விவாதம் ஏதும் இருக்காது என்பதைச் சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்தினார்.
முன்பெல்லாம், அரசின் அறிவிப்புகளுக்காக அரசியல் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு "நன்றி" தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர்.