உலக சுகாதார அமைப்பானது நோயெதிர்ப்புக் குறைபாடுடையவர்களுக்கு 3வது தவணை தடுப்பு மருந்தினை வழங்க பரிந்துரைத்துள்ளது.
நோயெதிர்ப்பு குறித்த நிபுணர்களின் உத்திசார் ஆலோசனைக் குழுவின் 4 நாட்கள் அளவிலான சந்திப்பினைத் தொடர்ந்து இது வெளியிடப் பட்டது.
இது குறித்த இறுதி அறிக்கையானது டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.
மிதமான மற்றும் தீவிரமான நோயெதிர்ப்புக் குறைபாடு உடையவர்களுக்கு உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் கூடுதல் தவணையானது கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டும் என இக்குழு கூறியுள்ளது.