TNPSC Thervupettagam

பசுமை ஹைட்ரஜன் மையங்கள்

October 14 , 2025 14 hrs 0 min 10 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது, மூன்று முக்கிய இந்தியத் துறைமுகங்களை பசுமை ஹைட்ரஜன் மையங்களாக அங்கீகரித்துள்ளது.
  • குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுகம், தமிழ்நாட்டில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மற்றும் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் ஆகியவை இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • இந்த அங்கீகாரமானது தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டமானது, இந்தியாவில் ஒருங்கிணைந்த ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் தூய்மையான ஆற்றலுக்கான மாற்றத்தை முன்னேற்றுவதும் நிகர சுழி உமிழ்வு நிலையை அடைவதும் இதன் இலக்காகும்.
  • இந்தத் திட்டமானது, பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் விளை பொருட்களின் பெரிய அளவிலான உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்