முதன்முறையாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வருடாந்திர திட்டத் தலைவர்களின் கருத்தரங்கானது குஜராத்தின் நர்மதை மாவட்டத்தில் உள்ள படேலின் ஒற்றுமைக்கான சிலை அருகே நடைபெறவிருக்கின்றது.
இது வெளிநாடுகளில் இந்தியாவின் நலன்களைக் ஊக்கப்படுத்துவதற்காகப் பணியாற்றும் இந்தியாவின் அனைத்துத் தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் கூடுவதாகும்.
மாநிலக் காவல்துறை பொது இயக்குநர்களின் வருடாந்திரக் கருத்தரங்கு இதே இடத்தில் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
“சர்தார் வல்லபாய் படேல்” இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்படுகின்றார்.