படையடுக்கில் தூசிப் படலங்களை உட்செலுத்துதல் (SAI) என்பது பூமியின் படை யடுக்கு மண்டலத்தில் தூசிப் படலங்கள் செலுத்தப்படுவதன் மூலம் மேற்பரப்பை அடையும் சூரிய ஒளியின் அளவைக் குறைப்பதாகும்.
இந்த SAI ஆனது உயரும் மேற்பரப்பு வெப்பநிலையை எதிர்த்துப் போராட உதவும் ஒரு குளிரூட்டும் விளைவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு பிலிப்பைன்சில் உள்ள பினாட்டுபோ எரிமலை வெடிப்பு போன்ற பெரிய எரிமலை வெடிப்புகளுக்குப் பிறகு காணப்பட்ட இயற்கை குளிரூட்டும் விளைவுகளை இது பிரதிபலிக்கிறது.
இந்த வெடிப்பு சல்பேட் படலங்களைப் படையடுக்கு மண்டலத்தில் உட்செலுத்தியது மற்றும் அந்த ஆண்டு உலக வெப்பநிலையைத் தற்காலிகமாக 0.5°C குறைத்தது.
SAI செயல்முறையின் செயல்திறன் ஆனது 20 கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில், மிகவும் குறிப்பாக நிலநடுக்கோட்டிற்கு அண்மைப் பகுதிகளில் இதைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது.
வெப்பமயமாதல் மிகவும் அதிகமாக இருக்கும் வெப்பமண்டலங்களை விட துருவப் பகுதிகளில் குளிர்தல் விளைவு அதிகமாக இருக்கும்.
ஒரு நாடு ஆனது படையடுக்கு மண்டலத்தில் தூசிப் படலங்களை உட்செலுத்தினால், அனைத்து நாடுகளும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகும் என்பதோடு அது எப்போதும் நல்ல வகையிலான தாக்கமாக மட்டுமே இருக்காது.