TNPSC Thervupettagam

பட்டியலினப் பழங்குடியினர் பட்டியலைத் திருத்துவதற்கான மசோதா

August 8 , 2021 1467 days 627 0
  • 2021 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலினப் பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) என்ற ஒரு மசோதாவினை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலினப் பழங்குடியினர்) ஆணையினைத் திருத்தி அமைக்கிறது.
  • இம்மசோதா, அருணாச்சலப் பிரதேசத்தின் அபோர் வகை பழங்குடியினரை அறிவிக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்குகிறது.
  • இது சில குறிப்பிட்ட பழங்குடியினருக்குப் பதிலாக இதர சில பழங்குடியினரை அந்தப் பட்டியலில் சேர்க்கிறது.
  • அவை தாய் காம்தி, மிஷ்மி-கமான் (மிஜீ மிஷ்மி), இடு (மிஷ்மி) மற்றும் தரோன் (திகாரு மிஷ்மி) ஆகியனவாகும்.
  • அரசியலமைப்புச் சட்டமானது, வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பட்டியலினப் பழங்குடியினரைக் குறிப்பிடுவதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கிறது.
  • மேலும் அறிவிக்கப்பட்டப் பட்டியலினப் பழங்குடியினரின் பட்டியலைத் திருத்தி அமைக்கவும் அது பாராளுமன்றத்திற்கு அனுமதி வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்