TNPSC Thervupettagam

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பு

May 8 , 2023 824 days 363 0
  • மத்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட பணமோசடித் தடுப்புச் சட்ட விதிகள் ஆனது, இரண்டு அரசிதழ் அறிவிப்புகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளன.
  • இந்த விதிகளானது, அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வம்) மற்றும் "அரசியல் ரீதியான பிரபல நபர்களை" கடுமையான ஆய்வுக்கு உட்படுத்துகின்றன.
  • இது அமலாக்க இயக்குநரகம் போன்ற முகமைகளின் நிதிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வதற்கான அணுகல் அதிகாரமானது, எந்த எந்த நபர்கள் மற்றும் எந்த நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்ற வரம்பினைக் கணிசமாக விரிவுபடுத்துகிறது.
  • இந்த விரிவுபடுத்தப்பட்ட வரையறைகளினுள், சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் விதிகளின் கீழ் இணைய சங்கேதப் பணங்களும் அடங்கும்.
  • இந்தப் புதிய விதிகள் ஆனது, வங்கி/நிதி நிறுவனங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதனை கட்டாயமாக்குகிறது.
  • அவை முன்னதாக பணமோசடி தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
  • இந்த விதிகளானது, பிட்காயின் மற்றும் ஈத்தேரியம் போன்ற இணைய சங்கேதப் பணங்கள் மூலம் மற்றொரு நபருக்காக "அல்லது அவர் சார்பாக" மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளன.
  • அமலாக்க இயக்குநரகம் (ED) எனபது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச் சாட்டுகளை விசாரிக்கும் முக்கிய நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்