பணியிட வன்முறைகள் மற்றும் பணியிட துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ILO உடன்படிக்கை
February 29 , 2024 793 days 495 0
பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ILO உடன்படிக்கையினை அங்கீகரித்த முதல் ஆசிய நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது.
உடன்படிக்கை எண் 190க்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிகழ்வானது, பணியிடச் சூழலில் உள்ள வன்முறை மற்றும் துன்புறுத்தலைத் தடுப்பதற்கும் அகற்றுவதற்கும் ஒரு முக்கியமான படிநிலையைக் குறிக்கிறது.
இதன் மூலம், பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக செயல்படும் 37 நாடுகளுடன் பிலிப்பைன்ஸ் நாடும் இணைந்துள்ளது.