பண்டைய இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்கான குழு
September 18 , 2020 2124 days 866 0
மத்திய அரசானது உலகின் மற்ற கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மற்றும் தற்போதைய காலத்திலிருந்து 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியக் கலாச்சாரத்தின் பரிணாமம் மற்றும் உருவாக்கம் குறித்து ஒரு விரிவான ஓர் ஆய்வை நடத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
16 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவானது புதுதில்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் சமூகத்தின் தலைவரான கே என் தீக்சித் மற்றும் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வின் முன்னாள் இணை பொது இயக்குநர் மற்றும் இதர பல உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.