தெலங்கானாவில் உள்ள பீரப்பா கோயிலுக்கு அருகில் பண்டைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பதோடுஇது இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தையப் பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்க்கிறது.
பெட்ரோகிளிஃப்கள் என்பது கடினமான கருவிகளைப் பயன்படுத்தி பாறை மேற் பரப்புகளின் வெளிப்புற அடுக்குகளை அகற்றி செதுக்கப்பட்ட உருவங்கள் ஆகும்.
இந்தச் சொல் "பெட்ரோஸ்" (கல்) மற்றும் "கிளிஃபின்" (செதுக்குதல்) என்ற கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவானது.
கொத்துதல், கீறுதல், தேய்த்தல், துளையிடுதல், மெருகூட்டுதல் மற்றும் சுரண்டுதல் போன்ற நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
அண்டார்டிகாவைத் தவிர உலகம் முழுவதும் காணப்படும் இவற்றிற்கு இந்தியாவில் உள்ள எடக்கல் குகைகள் ஒரு சிறந்த உதாரணமாகும்.