TNPSC Thervupettagam

பதவி உயர்வில் 4 சதவிகித இடஒதுக்கீடு

June 28 , 2025 6 days 59 0
  • தமிழ்நாடு மாநில அரசானது, அதன் ஊழியர்களின் பதவி உயர்வில் 4% என்ற இட ஒதுக்கீட்டை வழங்க உள்ளது.
  • ஒரு பதவியின் பணியாளர்களது எண்ணிக்கை ஐந்துக்கும் அதிகமாக இருந்தால், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட அடையாளம் காணப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.
  • ஒவ்வோர் அரசுத் துறை நிறுவனத்திலும் 25 ஆம் நிலை வரையிலான ஊதியம் பெறும் பதவிகளுக்கு மட்டுமே இத்தகையதொரு அடையாளம் கண்டறிதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் மூலம் பணி சேர்ப்பு செய்வதிலும் (குறைந்த ஊதிய அளவு முதல் அதிக ஊதிய அளவு வரை) இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.
  • பார்வைத் திறன் குறைபாடு மற்றும் குறைவான பார்வைத் திறன் உள்ளவர்களுக்கு 1% இடங்களும், கேட்கும் திறனற்றவர் மற்றும் கேட்கும் திறனில் சிரமம் உள்ளவர்களுக்கு 1% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பெருமூளை வாதம், தொழுநோய் குணப்படுத்தப்பட்டவர்கள், குள்ளத்தன்மை, அமிலத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மற்றும் தசைநார் சிதைவு உள்ளிட்ட சில உடலியக்கக்  குறைபாடுகளுக்கு 1% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஒரு விதியானது, 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் 34வது பிரிவின் விதிகளிலிருந்து அரசாங்கம் தனது எந்தவொரு நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்