- மத்திய மற்றும் மாநில அரசுகள் கணக்கீட்டு அளவிலான தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் ஒரு மனுவினை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
- இந்தத் தரவானது, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது, பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) சமூகத்தினருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும்.
- M. நாகராஜ் (2006) மற்றும் ஜர்னைல் சிங் (2018) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி கணக்கீட்டு அளவிலான தரவுகளைச் சேகரிக்க அரசு கடமைப் பட்டுள்ளது.
- ஒட்டு மொத்தப் பணிகளுக்குமான ஒவ்வொரு வகை பதவிகளுக்கும் தரவுச் சேகரிப்பு அவசியமாகும்.
- பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினச் சமூகத்தினர் வகிக்கும் பதவிகளின் சதவீதத்தைக் கண்டறிந்த பிறகு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு காலக்கெடுவை மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும்.
- பதவி உயர்வு உள்ள பதவிகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் போதிய இடங்கள் ஒதுக்கப் படாதது குறித்த மதிப்பீட்டை மாநிலங்களே மேற்கொள்ள வேண்டும்.
- கணக்கீட்டு அளவிலான தரவுகளைச் சேகரிப்பதற்கான ஒரு அலகாக 'கேடர்' (பணி நிலைப் பிரிவு) அங்கீகரிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டின் B.K. பவித்ரா என்ற வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு தீர்ப்பினை ரத்து செய்தது.
- 2019 ஆம் ஆண்டில் B.K. பவித்ரா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, கர்நாடக அரசு வேலைவாய்ப்பில் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினச் சமூகத்தினருக்கு மூத்த ஊழியர் முறையை அறிமுகப்படுத்திய 2018 ஆம் ஆண்டின் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தது.
கேடர் (பணிநிலைப் பிரிவு) என்பதன் பொருள்
- 'கேடர்' என்பது ஒரு பணியின் எண்ணிக்கை அல்லது ஒரு தனி அலகாக நிர்ணயிக்கப் பட்ட ஒரு பணியின் (பதவியின்) ஒரு பகுதியைக் குறிக்கிறது.
- கேடர்களை நிர்ணயிப்பது அந்தந்த மாநிலங்களின் விருப்பம் ஆகும்.
- ஒரு பதவியில் இருந்து வேறு நிலையில் உள்ள உயர் பதவிக்கு பதவி உயர்வு செய்வதற்கான நோக்கத்திற்காக முழு பதவியையும் கேடர் என்று கருத முடியாது.
- பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் தொடர்பான தரவுகள் முழு பணிகளையும் குறிப்பதாக மேற்கொள்ளப் பட்டால், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதன் முழு நடைமுறையும் அர்த்தமற்றதாகிவிடும்.