TNPSC Thervupettagam

பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி – குற்றச் சாட்டு

July 31 , 2019 2114 days 705 0
  • ஏறத்தாழ 30 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் நீதிபதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலாவது  நபராக தற்பொழுது பதவியிலுள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி SN சுக்லா உருவெடுத்து உள்ளார்.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி சுக்லாவிற்கு   எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
  • 1991 ஆம் ஆண்டில் K. வீராசாமி (எதிர்) மத்திய அரசு என்ற புகழ்பெற்ற வழக்கில் வழங்கப் பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு வரும் முதலாவது வழக்கு இதுவாகும்.

K. வீராசாமி வழக்கு

  • இந்த வழக்கில், உயர் நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதற்குக் கூட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருக்கின்றது.
  • ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுரையின் படியே இந்தியக் குடியரசுத் தலைவர் செயல்படுவதற்கான நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்