ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, 'கோதாவரி–பனகச்செர்லா திட்டத்தின்' முன்-சாத்தியக் கூறு அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் (CWC) சமர்ப்பித்துள்ளது.
கோதாவரி நதியின் உபரி நீரை கிருஷ்ணா நதி வழியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட இராயலசீமா என்ற பகுதிக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகளுக்காக திருப்பி விடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நீர்த்தேக்கமானது, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள பனகச்செர்லாவில் அமைந்துள்ளது.
நதிப் படுகைகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு முன் ஒப்புதல் தேவை என்பதால், தெலுங்கானா இந்தத் திட்டத்தினை 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் மீறல் என்று கூறுகிறது.
இந்தத் திட்டமானது கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியம் (KRMB), கோதாவரி நதி மேலாண்மை வாரியம் (GRMB) அல்லது CWC ஆணையத்திடமிருந்து இன்னும் அனுமதி பெறவில்லை.
தெலுங்கானாவுக்கு, கோதாவரி தீர்ப்பாயத்தினால் 968 ஆயிரம் மில்லியன் கன (TMC) அடி கோதாவரி நீர் ஒதுக்கப்பட்டது.