TNPSC Thervupettagam

பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை ‘PRAHAAR’

February 26 , 2026 17 hrs 0 min 4 0
  • உள்துறை அமைச்சகம் இந்தியாவின் முதல் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை வெளியிட்டு, அதற்கு PRAHAAR என்று பெயரிட்டுள்ளது.
  • நீர், நிலம், வான்வெளி மற்றும் இணையவெளி மூலம் இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று PRAHAAR கூறுகிறது.
  • இது எல்லை தாண்டிய பயங்கரவாதம், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற உலகளாவிய குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தளங்களின் தவறான பயன்பாடு ஆகியவற்றின் மூலம் வரும்  அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்தக் கொள்கை மின்சாரம், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளின் பாதுகாப்பை உள்ளடக்கியது.
  • இது சட்டப்பூர்வ நடவடிக்கை, தீவிரவாதம் நோக்கிய வழிநடத்தல் ஒழிப்பு, இணைய வெளி கண்காணிப்பு மற்றும் மாநிலங்களுக்கும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்