TNPSC Thervupettagam

பரிச்சா அணைக்கட்டு - ICIDயின் பாரம்பரிய அங்கீகாரம்

August 18 , 2026 13 hrs 0 min 53 0
  • உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான நீர்ப்பாசனக் கட்டமைப்பான வரலாற்றுச் சிறப்புமிக்க 'பரிச்சா அணைக்கட்டு' (Parichha Weir), சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தால் (ICID) 'உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்பு' (WHIS) ​​எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளாவியப் பாரம்பரிய வரைபடத்தில் இடம் பிடித்துள்ளது.
  • பரிச்சா அணைக்கட்டு 1886-ஆம் ஆண்டில் பெட்வா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
  • இத்திட்டத்தின் தொடக்கம் 1855-ஆம் ஆண்டிலேயே அமைந்தது; அப்போது கேப்டன் ஸ்ட்ராச்சி (Captain Strachey) என்பவர் பந்தேல்கண்ட் பகுதிக்கு ஒரு கால்வாய் அமைப்பை உருவாக்க முன்மொழிந்தார்.
  • இது பெட்வா கால்வாய் அமைப்பின் முதன்மை நீர்ப்பாசனக் கட்டமைப்பாக (headworks) விளங்குகிறது.
  • பெட்வா கால்வாய் அமைப்பு என்பது வறட்சிக்கு ஆளாகக்கூடிய பந்தேல்கண்ட் பகுதிகளுக்கு நீரை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விரிவான நீர்ப்பாசன வலையமைப்பாகும்.
  • இந்த பாரம்பரிய அங்கீகாரம், அக்டோபர் மாதம் பிரான்சில் நடைபெறவுள்ள 26-வது ICID சர்வதேச மாநாடு மற்றும் 77-வது சர்வதேச நிர்வாகக் குழு கூட்டத்தின் போது அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.
  • 2022-ஆம் ஆண்டில், ஜான்சியில் உள்ள சுகுவா-துக்வான் (Sukwa-Dukwan) அணைக் கட்டும் ICIDயின் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

WHIS திட்டம்

  • 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மற்றும் தங்களின் அசல் நோக்கத்திற்காகத் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை இத்திட்டம் அங்கீகரிக்கிறது.
  • இது சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தால் (ICID) வழங்கப்படுகிறது.
  • 1950-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ICID, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
  • நிலையான விவசாய நீர் மேலாண்மையை ஊக்குவிக்கவும் அடையவும் நீர்ப்பாசனம், வடிகால் மற்றும் வெள்ள மேலாண்மை ஆகிய துறைகளில் செயல்படும் ஒரு முன்னணி அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை சார்ந்த இலாப நோக்கற்ற சர்வதேச அமைப்பு இதுவாகும்.

பெட்வா ஆறு

  • இது மத்திய மற்றும் வட இந்தியாவில் பாயும் 590 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு ஆறாகும்.
  • இது யமுனை ஆற்றின் வலது கரையில் இணையும் ஒரு முக்கிய துணை ஆறாகும்.
  • இது மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் உள்ள விந்திய மலைத்தொடரில் உற்பத்தியாகி, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் வழியாக வடகிழக்கு திசையில் பாய்ந்து, ஹமீர்பூர் அருகே யமுனை ஆற்றுடன் கலக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்