ஜூன்-செப்டம்பர் மாதங்களில் 'இயல்பை விட அதிகமான' மழைப்பொழிவு பதிவாகும் என்று முன்னர் ஏப்ரல் மாதத்தில் வழங்கிய ஒரு முன்னறிவிப்பை புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்ற இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) மீண்டும் வழங்கியுள்ளது.
இந்த தென்மேற்குப் பருவமழை காலத்தில் இந்தியா சுமார் 92 செ.மீ மழைப்பொழிவை (நீண்ட காலச் சராசரியில் 106%) பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்பதோடு இது 91.3 செ.மீ (சராசரியில் 105%) மழைப் பொழிவை விட சற்று அதிகமாகும்.
தென்மேற்குப் பருவமழையானது மே 24 ஆம் தேதியன்று கேரள மாநிலத்தில் அதன் வழக்கமான தொடக்கத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியதாக வானிலை மையம் கூறியது.
வழக்கமாக, தென்மேற்குப் பருவமழையானது ஜூன் 01 ஆம் தேதி அன்று கேரளாவில் தொடங்கி ஜூலை 08 ஆம் தேதிக்குள் முழு நாட்டையும் சென்றடையும்.
இது செப்டம்பர் 17 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்னடையத் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முழுமையாக பின்னடையும்.
2009 ஆம் ஆண்டு பருவமழைக்குப் பிறகு இவ்வளவு முன்னதாக பருவமழையானது தொடங்கியதில்லை.
1975 ஆம் ஆண்டு முதல், ஆரம்பத்தில் கேரளாவில் பருவமழையானது 1990 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியன்று, திட்டமிட்டதை விட 13 நாட்கள் முன்னதாகவே தொடங்கியது.
மேலும், இந்தப் பருவக்காற்றானது மும்பைக்கு முன்கூட்டியே முன்னேறியது என்ற ஒரு நிலையில் இது வழக்கத்தை விட இரண்டு வாரங்கள் முன்னதாகவே மே 26 ஆம் தேதி அன்று அந்நகரத்தை அடைந்து 35 ஆண்டுகாலச் சாதனையை விஞ்சியது.
திபெத்தியப் பீடபூமியில் புயலுக்கு முன்னதான சுழற்சி மற்றும் உகந்த வெப்பநிலை உள்ளிட்ட சில பல்வேறு உலகளாவிய காரணிகளுடன், "பருவமழை முன்னேற்றுவதில்" காரணிகளின் ஒருங்கிணைவு ஒரு முக்கியப் பங்கை இதில் கொண்டிருந்ததாக IMD அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய நிலநடுக்கோட்டுப் பசிபிக் பெருங்கடலின் வெப்பமயமாதலுடன் முக்கியத் தொடர்புடைய எல் நினோ இல்லாதது சரியான பருவமழைக்குச் சாதகமான முக்கியக் காரணியாகும்.
மேலும் இது நடைமுறையில் இருக்கும் ஆண்டுகளில் சுமார் 60% பலவீனமான பருவ மழையுடன் தொடர்புடையது.