சீனாவிலுள்ள சன்சிங்தூயி எனும் சிதைந்த தளத்தில் பலிபீடமானது (குழிகள்) சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
சிக்சூவான் மாகாணத்திலுள்ள சன்சிங்தூயி தளத்தில் 6 புதிய பலிபீடங்களையும் சுமார் 500 பொருட்களையும் சீனத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக சீனாவின் தேசியக் கலாச்சாரப் பாரம்பரிய நிர்வாக அமைப்பு கூறியுள்ளது.
இவை 3000 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.
இந்த 6 பலிபீடங்களுள் நான்கில் தங்க முகமூடிகள், தங்கத்தகடு, நுண்ணிய தந்தச் சிற்பங்கள், வெண்கல மரங்கள், வெண்கல முகமூடிகள், கார்பனேற்றப்பட்ட அரிசி மற்றும் விதைகள் ஆகியவற்றைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சன்சிங்தூயி என்பது சீனாவின் மிகப்பெரிய வெண்கல கால கலாச்சாரத் தளமாக விளங்கும் தொல்லியல் தளமாகும்.