TNPSC Thervupettagam

பல்லுயிர்ப்பெருக்கங்களின் பலன் பகிர்வு விதிமுறைகள் 2025

May 9 , 2025 34 days 66 0
  • உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் பலன்களைப் பகிர்வதை மேலாண்மை செய்வதற்காக தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் ஆனது ஒரு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
  • இது 2025 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மை (உயிரியல் வளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல் மற்றும் அதன் பலன்களின் நியாயமான மற்றும் சமமானப் பகிர்வு) ஒழுங்குமுறை விதிகள் என அழைக்கப்படுகிறது.
  • இந்த விதிகளானது, எண்ணிம வரிசைத் தகவல்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய தகவல்கள் உட்பட உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதற்கான பலன்களைப் பகிர்வதற்கு தற்போது வழிகாட்டும்.
  • 5 கோடி ரூபாய் வரையிலான வருடாந்திர வருவாய் உள்ள பயனர்கள் பலன்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.
  • 5 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரையில் வருவாய் உள்ளவர்கள் உற்பத்தியின் வருடாந்திர மொத்தத் தொழிற்சாலை கிடங்கு சார் விற்பனை விலையில் சுமார் 0.2 சதவீதத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் (அரசு வரிகளைத் தவிர்த்து).
  • மீதமுள்ள இரண்டு வரம்புகள், முறையே 50 முதல் 250 கோடி ரூபாய் வரையிலும், 250 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட வருவாயில் முறையே 0.4 சதவீதம் மற்றும் 0.6 சதவீதம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
  • ஆண்டிற்கு 1 கோடி ரூபாய்க்கு மேலான வருவாய் ஈட்டும் அனைத்து பயனர்களும், ஓராண்டில் பயன்படுத்தப்படும் வளங்கள் குறித்த ஒரு தகவலுடன் ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இவ்வாறு சேகரிக்கப்பட்ட மொத்தத் தொகையில், சுமார் 10-15 சதவீதம் ஆனது தேசிய பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்திடம் வைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்