பல்லுயிர்ப்பெருக்கங்களின் பலன் பகிர்வு விதிமுறைகள் 2025
May 9 , 2025 34 days 67 0
உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் பலன்களைப் பகிர்வதை மேலாண்மை செய்வதற்காக தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் ஆனது ஒரு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மை (உயிரியல் வளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல் மற்றும் அதன் பலன்களின் நியாயமான மற்றும் சமமானப் பகிர்வு) ஒழுங்குமுறை விதிகள் என அழைக்கப்படுகிறது.
இந்த விதிகளானது, எண்ணிம வரிசைத் தகவல்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய தகவல்கள் உட்பட உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதற்கான பலன்களைப் பகிர்வதற்கு தற்போது வழிகாட்டும்.
5 கோடி ரூபாய் வரையிலான வருடாந்திர வருவாய் உள்ள பயனர்கள் பலன்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.
5 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரையில் வருவாய் உள்ளவர்கள் உற்பத்தியின் வருடாந்திர மொத்தத் தொழிற்சாலை கிடங்கு சார் விற்பனை விலையில் சுமார் 0.2 சதவீதத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் (அரசு வரிகளைத் தவிர்த்து).
மீதமுள்ள இரண்டு வரம்புகள், முறையே 50 முதல் 250 கோடி ரூபாய் வரையிலும், 250 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட வருவாயில் முறையே 0.4 சதவீதம் மற்றும் 0.6 சதவீதம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
ஆண்டிற்கு 1 கோடி ரூபாய்க்கு மேலான வருவாய் ஈட்டும் அனைத்து பயனர்களும், ஓராண்டில் பயன்படுத்தப்படும் வளங்கள் குறித்த ஒரு தகவலுடன் ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட மொத்தத் தொகையில், சுமார் 10-15 சதவீதம் ஆனது தேசிய பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்திடம் வைக்கப்படும்.